வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு, ஐ என் டி யு சி சார்பாக தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு , ஐ என் டி யு சி மாவட்ட தலைமை அலுவலகத்தில், தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகரத் தலைவர் அகமது மைதீன் தலைமையில், தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம்மைதீன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களாக வலங்கைமான் பங்குத்தந்தை ஆல்பர்ட், சிஸ்டர் பெலிண்டா சுப்ரீயர், ஆசிரியர் சிறிய புஷ்பம், பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் செயலாளர் அப்துல் கரீம், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், பொருளாளர் ரஹிமுத்தீன்,கோல்டன் மளிகை சரி அலாவுதீன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் தெய்வ. பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சமத்துவமாக அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொண்டு இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *