நான்கு கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடை யாக வழங்கிய பெண்ணிற்கு பாராட்டு விழா….

மதுரை மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆயி என்ற பூரணம். தனது மகள் ஜனனி நினைவாக அரசு பள்ளிக்கு, நான்கு கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடையாக வழங்கியுள்ளார்.

அவருக்கு பாராட்டு விழா கொடிக்குளம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்புரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கிழக்கு வட்டார கல்வி அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நமது கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக சேவா ரத்னா மாயகிருஷ்ணன்வாழ்த்துரை வழங்கி கல்வி செம்மல் விருது வழங்கினார்.

திருமங்கலம் கார்த்தி சமூக ஆர்வலர் கலாம் வல்லரசு கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *