கள்ளச்சாராய விற்பனை பயன்படுத்துதல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் அறிவிப்பு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் பயன்படுத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் பயன்படுத்துவோர் குறித்து தொலைபேசி மற்றும் Whats App மூலம் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 9498100865.
தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும்
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்