கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அருகே சாக்காங்குடி கிராமத்தில் ஆவட்டி ஜே.எஸ்.ஏ வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய முப்பெரும் விழா நடைபெற்றது .
கல்லூரியின் முதல்வர் லக்ஷ்மணன் தலைமையில் சிறப்பு பயிற்சியாளர்கள் வேல்பிரபாகரன வனிதா ஸ்ரீ கலைவானி திட்ட ஒருங்கிணைப்பாளர்
தட்சிணாமூர்த்தி சுந்தரவடிவு திட்ட பொருப்பாளர் வேல்பிரபாகரன சந்தோஷ் குமார் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பிருந்தா தேவி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் உணவு மதிப்பு கூட்டுதல் பற்றிய பயிற்சி நெல் விதைகள் கண்காட்சி அங்கக வேளாண்மை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது
சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டார் இந்த விழாவில் உணவு மதிப்பு கூட்டுதல் முருங்கை மற்றும் தக்காளியை வைத்து செய்முறை பயிற்சி நடைபெற்றது மேலும் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள் பற்றி கல்லூரி பேராசிரியர்கள் விளக்கினர்
இதில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்