பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
கோபுராஜபுரம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றக்கோரி கிராம மக்கள் குடும்ப அட்டையினை ஒப்படைக்கும் போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் மாலாபுரம் கிராமத்தில் மேலத்தெருவில் தனிநபர் ஆக்கிரப்பு செய்துள்ள இடத்தினை அகற்றக்கோரி கிராம மக்கள் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கைகளை வலியூறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் பாபநாசம் வட்டாட்சியரை சந்தித்து குடும்ப அட்டையுடன் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
கோரிக்கை மனுவின் மீது உரிய நடடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததன் பேரில் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.