தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், மாநில அரசு விவசாய தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரேசன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர் நந்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, முருகன், வெங்கடேசன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்..
பேட்டி: சுந்தரேசன்,
மாவட்ட செயலாளர்,