மாவீரன் நேதாஜியே!
கவிஞர் இரா .இரவி

வெள்ளையர்களை ஓட ஓட
விரட்டியதில் பெரும் பங்கு வகித்தவன் நீ
அடிக்கு அடி என அடி மேல்
அடித்த அசகாய சூரன் நீ
உனது பெயரை உச்சரித்தாலே
உச்சரித்தவர்களுக்கு வீரம் பிறக்கும்
உலக மனிதர்கள் யாவரும் சமம்
ஆண்டான் அடிமை இல்லை அறிவித்தவன் நீ
ஆணவக்காரகளின் ஆணவத்தை
அடித்து நொறுக்கிய வீரன் நீ
துப்பாக்கி யார் சுட்டாலும்
சுடும் என்று உணர்த்தியவன் நீ
ஆயுதம் ஏந்திய அறிவிலிகளுக்கு
ஆயுதத்தால் தக்க பதில் தந்தவன் நீ
கொட்டக் கொட்டக் குனிந்தது போதும்
கொட்டிய கரங்களை முறித்தவன் நீ

நீ இறந்து விட்டதாக யார் ?சொன்னது
மாவீரர்களின் இதயத்தில் என்றும் வாழ்கிறாய் நீ
தைய்வான் நாட்டில் விமான விபத்தில் நீ
இறந்து விட்டதாகக் கதை கட்டினார்கள்
தைய்வான் நாடோ விமான விபத்து
நடக்கவே இல்லை என்று அறிவித்தது
இந்தியாவின் விடுதலைக்காக முதன்முதலில்
இந்திய ராணுவம் அமைத்தவன் நீ
பெண்ணுரிமை பற்றி பேசுகின்றோம் இன்று
பெண்களைப் படையில் சேர்த்தாய் அன்று
உலகில் எந்த மூலையில் ஆதிக்கம்நடந்தாலும்
உலகப் போராளிகளின் தலைவன் நீ.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *