பாலமேட்டில் ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவிலில் கனி மாற்று திருவிழா
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் பொங்கல் அபிஷேக தீபாதாரணை கனி மாற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து வானவேடிக்கையுடன் மேல தாலங்கள் முழங்க பக்தர்கள் பழ தட்டுடன்ஸ்ரீ மந்தைக்கிழவி அம்மன்ஸ்ரீ சாத்தாகோவில்களில் கனி மாற்றி அபிஷேகம் செய்த பின் பட்டாளம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கனி மாற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன
தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது இவ்விழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம் மற்றும் நாயுடு இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.