ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 5 மணி நேரமாக இறந்த 6 மாத குழந்தையை கையில் வைத்து பரிதவித்த தாய்.;-
தென்காசி மாவட்டம் அஞ்சான்கட்டளையை சேர்ந்த சந்தன குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஷ்வரி தம்பதியினர்க்கு 2 குழந்தை உள்ளது. இவர்களது 6 மாத குழந்தை ஹன்சிகா ஶ்ரீ க்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஆலங்குளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மருத்துவமனை வரும் வழியில் குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். இது சம்பந்தமாக கடையம் காவல் நினலயத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வர தாமதித்த நிலையில் சுமார் 5 மணி நேரம் மேலாக இறந்த குழந்தையை கையில் தாய் வைத்திருந்து பரிதவித்து வந்துளார் .
மேலும் குழந்தையின் தாய் மனநிலை சரியில்லாதவர் போல பிதற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கூறி பல மணி நேரம் காத்திருக்க வைத்ததால் மருத்துவமனை தரையில் அமர்ந்து இறந்த குழந்தையை கையில் வைத்து தர்ணா போராட்டத்தில் உறவினர்கள் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் பேச்சு வார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்தார். மருத்துவர் மற்றும் போலீசார் அலட்சியத்தால் ஒரு பெண்ணின் மனநிலை பாதிக்கும் நிலைக்கு சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.