அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் ஜெயங்கொண்டம் மையத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மையத்தின் தலைவர் பொறியாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொறியாளர்கள் மார்ட்டீன் குமரேசன் கொளஞ்சி வில்வநாதன் செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொறியாளர் அன்புராஜ் வரவேற்புரை ஆற்றினார்

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருட்களின் ஜல்லி எம் சாண்ட் பி சாண்ட் ஆகியவைகளின் செயற்கையான விலை ஏற்றத்தை கண்டித்தும் விலைகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கோரியும் தமிழக அரசினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பொறியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *