பாபநாசத்தில் நடைபெற்ற, சமத்துவத்தை சாதிக்கும் பெண்கள் தினம் கொண்டாட்டம்..

மகளிர் தினத்தை போற்றும் வகையில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏராளமான பெண்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தலித் கிறிஸ்தவர் நலசங்கம் சார்பில் சமத்துவத்தை சாதிக்கும் வகையில் பெண்கள் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் தினத்தை போற்றும் வகையில் ஏராளமான பெண்கள் கைகளில் கொடிகளுடன் சிலுவைகளை ஏந்திய வண்ணம், சமத்துவத்தை போற்றுவோம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு புனித செபஸ்தியார் திருத்தலத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற மகளிர் தின சிறப்பு பிரார்த்தனையில் ஏழையான நாங்கள் ஏற்றம் பெற வேண்டும், பெண் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், அனைவரிடத்திலும் சமத்துவம் வளர வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லா உலக அமைய வேண்டும் உட்பட உலக அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டனர். மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உட்பட ஆண்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *