பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆபத்து காத்த விநாயகர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆவேரி கரையின் கீழ்புறத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆபத்து காத்த விநாயகர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 32 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத வெகு விமரிசையாக நடைபெற்றது.
மிகவும் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் ஆகம விதிப்படி புதிதாக கட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. முன்னதாக புனித நீரான கங்கை தீர்த்தம் காவேரி தீர்த்தம் கும்பகோணம் மகாமக குளத்தின் தீர்த்தம் ராமேஸ்வரம் கோட்டி தீர்த்தம்
உள்ளிட்ட புனித நீர்களை பூஜை செய்து கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நான்கு கால யாகசாலை பூஜையில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாஹூதி அளிக்கப்பட்டன.
பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் விமான கலசங்களுக்கு நவாக்கினி குண்டங்கள் பஞ்ச குண்டங்கள் வளர்த்து சுந்தர கணேசன் சிவாச்சாரியார் தலைமையில் 32 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் முழங்க பூஜை செய்யப்பட்ட புனித நீரால் கும்ப கலசத்திற்கு காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டவுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர். முன்னதாக வேத பாராயணம் திருமுறை புராணம் ஆன்மீக சொற்பொழிவு பக்தி இசை கச்சேரிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.