புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளனர் இதனையொட்டி நேற்று கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆலோசனை வழங்கினார்.

மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் துணிச்சலாக தேர்வை எதிர்கொண்டு அனைவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *