எதிர்காலத்தில் கலெக்டருக்கு படித்து கஷ்டப்படும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய தனியார் பள்ளி மாணவி பேட்டி.
பொள்ளாச்சி- மே-11
பொள்ளாச்சி ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியருக்கு சொந்தமான நாச்சியார் வித்யாலயா பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்,தற்போது தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பள்ளி மாணவ மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது, இதில் நாச்சியார் வித்யாலயா பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் 500க்கு 494 மார்க் பெற்று. பள்ளியில் முதலிடத்தில் பிடித்தனர்,மாணவிகள் கூறும் பொழுது பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் எங்கள் மீது தனி கவனம் செலுத்தி பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பயிற்சி அளித்தனர் இதனால் 494 மார்க் பெற்று முதலிடத்தில் உள்ளோம் மேலும் எதிர்காலத்தில் இருதயம் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வேண்டும் மற்றும் வருங்காலத்தில் கலெக்டர்க்கு படித்து சாலையோரம் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தங்களது லட்சியம் என தெரிவித்தனர்,தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.