பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பகுதியில் நள்ளிரவு. ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த இருவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா, மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை உள்ளிட்டவை கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட தந்தை முகம்மது சஹாப்தின் மற்றும் அவரது மகன் ஆரிப் ராஜா ஆகிய இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஆனைமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகம்மது சஹாப்தின் மீது கோவை கா.கா., சாவடி காவல்நிலையதில் 2007ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *