குருவித்துறை குரு பகவான் கோவில் நடை திறப்பு நேரம் நீட்டிப்பு.!!
குருபெயர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் செயல் அலுவலர் தகவல்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளக்கும வரும்் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில் முன்பு தவக்கோலத்தீல் சுயம்புவாக அருள்பாலித்து வரும் குருபகவான் கோவிலில் மே.1.ந்தேதி குருபகவான் மேஷம் ராசிலிருந்து.ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு திரு கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி தலைமை தாங்கி பேசியதாவது.;
திருக்கோவில்களூக்கு வரும் ,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க மே.2.ந்தேதி முதல் சித்திரரத வல்லப பெருமாள் மற்றும் குருபகவான் கோவில்களில் வாரத்தில் மற்ற நாட்களில் காலை 8.மணிக்கு நடை திறந்து நன்பகல் 12.30.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.மணியளவில் நடை முடிவும்..
மேலும் வாரத்தில் வியாழன் கிழமை மட்டும் காலை 7.30.மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 2.மணியளவில் நடை சாத்தப்பட்டு பின்னர் பிற்பகல் 3.30.மணியளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு இரவு 7.மணிக்கு நடை மூடப்படும் எனவும் மேலும் குரு பெயர்ச்சி முன்னிட்டு திருகோவில் நிர்வாகத்தில் ரூ.200.க்கு லெட்ச்சார்சனை டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு மே.1.ந்தேதி மதியம் 2.மணிமுதல் 3.மணி வரை யாகசாலையில் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்படும் எனவும் ரூ.500.டிக்கெட்பெறும் மெய்யம்பர்களுக்கு மே. 2.ந் தேதிலிருந்து 16.ந்தேதி வரை தினசரி 50.நபர் வீதம் காலை 6.முதல் 7.வரை குருபகவான் சன்னதி முன்னீலையில் குருபகவான் வெள்ளிகாப்பு கவசத்தில் சிறப்பு தரிசனம் செய்து பெயர். ராசிகளுக்கு தனிதனியாக பரிகார அர்ச்சனை செய்து வெள்ளி டாலர் மற்றும் பிரசாதம் வழங்கப்படூம் என்று தெரிவித்தார்.மேலும் விழாவின்போது குடிநீர் சுகாதாரம் லைட் வசதி மற்றும் போக்கு வரத்து பாதுகாப்பு உள்ளிட்டைவைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பி நடவடிக்கை கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கோவில் பணியாளர் மணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள். சடகோபன் பட்டர் பாலாஜி பட்டர்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.