எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கிராம பகுதியில் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு.
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபு கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்பொழுது தங்கள் பகுதிகளுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செய்தி தருவேன் என உறுதி அளித்தார் மேலும் கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தைக்கால் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அப்பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது சீர்காழிஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.