காஞ்சிபுரம் பிஏவி இண்டர் நேஷனல் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தை அடுத்த கீழக்கதிர்ப்பூரில் உள்ள பிஏவி இண்டர் நேஷனல் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கீழ்க்கதிர்ப்பூர் பி.ஏ.வி.இண்டர் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு அப்பள்ளியின் முதல்வர் மேரி ஸ்டெல்லா தலைமை வகித்தார். பள்ளியின் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.
முதலாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விடுமுறையே எடுக்காமல் பள்ளிக்க வந்த மாணவர் ஆர்.நரேன் மற்றும் பவ்யா ஸ்ரீ ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி கே.சண்முகம் கலந்து கொண்டு சிறந்த மாணவர் விருதையும்,ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும்,
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
விழாவில் விருது பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் த.ரமேஷ், தீபா மற்றும் தாத்தா பாட்டி ஜி.வீராசாமி, அன்னம்மாள் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.