திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , செம்பியநல்லூர் கிராமம், வெள்ளியம்பாளையம், மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 17- ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இருப்பினும் பெரும்பாலான பொது மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடம் இங்கு செயல்படுவது தெரியாமல் நீண்ட தூரம் வெளியே சென்று கல்வி பயின்று வருகிறார்கள், மேலும் வெள்ளியம்பாளையம் ஊர் பொது மக்களுக்கு இதுவே நாடாளுமன்ற,சட்டமன்ற, ஊராட்சி மன்ற தேர்தல்களுக்கு வாக்குச்சாவடி மையம் ஆகும். எனவே ஊர் பொது மக்களுக்கு தேர்தல் நேரங்களில் வழிகாட்டுதலாகவும் பயன்படும் என எண்ணி பள்ளிக்கூடத்தின் பெயருடன் கூடிய பலகை ஒன்றினை நாதம்பாளையம்-வெள்ளியம்பாளையம் ரோட்டில் யுகம் பொதுநல அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது இப்பகுதியின் வார்டு கவுன்சிலர் ரஜினிகாந்த், மகாலட்சுமி நகர் வீட்டு வசதி நல சங்க செயலாளர் மகாராஜா, மகாகணபதி கோவில் செயலாளர் விஷ்ணுகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கம் மேலும் அறக்கட்டளையின் நிறுவனர் ரோஸி சதீஸ்குமார் மற்றும் நவீன் பிரசாத், ஸ்ரீதர், ஆசிப் அலி, வரதராஜ், தீபக், ஜனார்த்தனன், ஜெகதீஷ்,ஜீவா, கணேஷ், சரோஜா, அருண்குமார் என அனைத்து நிர்வாகிகள் மேலும் ஊர் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *