தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் அளவெடுக்கும் பணி நடைபெற்றது.

                குன்றக்குடி சின்ன மருது பெரிய மருது பாண்டியர் தையல் கூட்டுறவு சங்கத்தின் சீருடை சரிபார்ப்பவர்  பிரியா மற்றும் சங்க உறுப்பினர்கள் வாசுகி, செல்வி, செங்கமலம் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கான அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர், வரும் கல்வி ஆண்டுக்கான விலையில்லா சீருடை பள்ளி மாணவர்கள் வழங்குவதற்காக இந்த அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்  ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *