திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரகாரத்தில் உள்ள ஆர்.ஆர். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 14 ஆம் ஆண்டு ஆண்டு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவ,மாணவிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்கும் வகையில், மழலையர் குழந்தைகள் பல்வேறு வேடங்களில் பங்குபெற்றும், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பட்டிமன்ற புகழ் செந்தில்குமார் மற்றும் பள்ளியின் தாளாளர்கள் ராஜசேகர், நாகராணி ஆகியோர் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய ,ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.