திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இவ்வாண்டு கடந்த மார்ச் 8- ஆம் தேதி பூச்சொரிதல் விழா உடன் தொடங்கி, 10- ஆம் தேதி முதல் காப்பு கட்டுதலும், 17-ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதளுடன், தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், இரவு இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று கடந்த 24- ஆம் தேதி முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா நடைப்பெற்று.

31-ஆம் தேதி புஷ்பப்பல்லக்கு விழாவும் நடைபெற்றது. வருகின்ற 7- ஆம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழா நடைபெறுகிறது. அன்று காலை பதினோரு மணி அளவில் சிறப்பு அபிஷேகஆராதனையும், மாலை ஆறு மணி அளவில் ஆலயத்தின் எதிர் புறம் வரதராஜன் பேட்டை தெரு ஜி.எம். சேகர் நினைவாக, வலங்கைமான் ஆர். எஸ். கன்ஸ்ட்ரக் ஷன், தொழுவூர் ஜி. குணசேகரனின் சிறுத்தை புலி சிலம்பப் பள்ளி இணைந்து வழங்கும் தமிழ் மண்ணின் மங்காத மாபெரும் சிலம்பக்கலை நிகழ்ச்சியும், இந்நிகழ்வில் பல்வேறு ஊர்களில் இருந்து சிலம்பக்கலை ஆசான்களும், மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் ஜெயம், பி. எம் .தாஸ் வழங்கும் ராக நிலா இன்னிசை பொழுது நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அபிஷேக ஆராதனை மற்றும் நிகழ்ச்சி உபயம் வலங்கைமான் தொழிலதிபர் டாக்டர் ஆர். செல்வம் ஆகும். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க.மும்முர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், வரதராஜன்பேட்டை தெருவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் உபயதாரர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *