வலங்கைமான் ஒன்றியத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் சோமு. இளங்கோவன் ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில், நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை செல்வராஜை ஆதரித்து, கதிர் அருவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக தலைமை கழக பேச்சாளர் சோமு. இளங்கோவன் ஆலங்குடி கடைவீதி, ஹரித்துவாரமங்கலம் கடைவீதி, அவளிவ நல்லூர் கடைவீதி, ஆவூர் கடைவீதி, வலங்கைமான் கடைவீதி ஆகிய ஐந்து இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஏ. எம். மோகன், வலங்கைமான் திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரதீப ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திமுகவின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் விஜயபாஸ்கர், கரிகாலன், ஒன்றிய கழக பொறுப்பாளர் சிற்றரசு, வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தனிமாறன், ஒன்றிய பிரதிநிதி எஸ். ஆர். ராஜேஷ், காங்கிரஸு கட்சி வலங்கைமான் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் அரவத்தூர் மணி, காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் குலாம் மைதீன், நகரத் தலைவர் ராஜு, சிபிஎம் கட்சி வலங்கைமான்ஒன்றிய செயலாளர் என். ராதா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட விவசாய அணி மு. வாசு, இளம் சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் ஏ. செல்வராஜ், பி. சின்ன ராசா, ஜி. ரவி, வி. பாக்கியராஜ், ஏ. மருதையன், ஜி. பிரபாகரன் இவர்கள் அனைவரும் ஐந்து மையங்களிலும் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்தனர். நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், வாக்காளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *