கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன்பட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது 25 தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கடந்த மே 15 இல் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வெங்காயம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள தென்னந் தோப்பிற்கு சென்றபோது அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

அவரது உயிரற்ற உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்பு உயிரற்ற உடல் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த உயிரற்ற உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்கள் கூறும்போது விவசாயத்திற்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை வே லி க்கு எப்படி பயன்படுத்தலாம் இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் பதில் சொல்ல வேண்டும் என்றனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேனி தாசில்தார் ராணி ஏ டி எஸ் பி விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படதால் மீண்டும் தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். பின்னர் இறந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஆனந்தி மற்றும் உறவினர்கள் டிஆர்ஓ ஜெயபாரதியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *