காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் 1000 – க்கும்மேற்பட்டோர் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் சிறப்பு தொழுகை.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான புனித பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு விரதம் எனப்படும் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழக மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருந்து வந்த நிலையில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து சிறப்புத் தொழுகையுடன் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் புகழ்பெற்ற பெரிய பள்ளிவாசலில் இன்று காலை 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும் இதைப்போல் காரைக்காலில் உள்ள மெய்தீன் பள்ளி, கிதார் பள்ளி என அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *