பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் ஆங்காங்கே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

தொடர்ந்து நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு வருகை தந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றார். அதன்படி ஏற்கனவே கடந்த மாதம் நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தநிலையில் வரும் 15ஆம் தேதி நரேந்திர மோடி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார் .அதற்காக அம்பை அடுத்து உள்ள அகஸ்தியர்பட்டியில் மோடி வருகை தரும் ஹெலிகாப்டர் இறங்குதளம், பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆய்வு செய்தார் .

தொடர்ந்து அந்த பகுதியில் மேடை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *