சாலையை உடனடியாக சீர்செய்ய செயற்பொறியாளரை அனிபால் கென்னடி எம்எல்ஏ சந்தித்து வலிறுத்தினாா்
புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை குண்டு குழியுமாக இருந்து வருகிறது, ,
இது சம்பந்தமாக முன்கூட்டியே பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ஏழுமலையிடம் தெரியபடுத்தியும் வேலை நடைபெறவில்லை. இது குறித்து உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வல்லவனை நேரில் அணுகி தெரிவித்தார்.
புத்தாண்டு பண்டிகை தினம் நெருங்கிய நாட்களில் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சுற்றுலா பயனாலிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சில இடங்களில் குண்டு குளியுமாக படுமோசமான நிலையில் சாலைகள் ஆங்காங்கே விபத்து நேரிடும் வகையில் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இளைஞர்கள் பலர் ஆர்வக்கோளாறில் உயிர்பலி ஆகும் நிலையில் வேகமாக சாலை பலன்களை கவனிக்காமல் ஓட்டுவார்கள். சுற்றுலா பயனாளிகளுக்கும் எங்கெங்கு பள்ளம் இருக்கும் என்பது தெரியாது இதனால் படுமோசமான சாலையில் விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன, எனவே அம்பேத்கார் சாலை, சுப்பையா சாலை, காந்தி வீதி, ஆம்பூர் சாலை ஆகிய இடங்களில் உள்ள பள்ளங்களை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் வல்லவன் அவர்கள் சந்தித்து அவர் பார்வைக்கு கொண்டு வந்தார், இதனை இன்று இரவே கான்கார்ட் மூலம் சீர் செய்து தருகிறோம், பின்னர் புத்தாண்டு பண்டிகை முடிந்த பின் தார் சாலையாக அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்தனர்கள், உடன் உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் பன்னீர்,மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ் கௌதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *