நோய்களை அண்டவிடாமல் காக்கும் இஞ்சி, பூண்டு, தேன் சாறு

செய்முறை
இஞ்சியை நன்றாக தோலை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவேண்டும்.

பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பூண்டின் தோலை உரித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி வடித்து சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். அரைத்த சாற்றை அப்படியே அசையாமல் 20 நிமிடங்கள் வைத்திருக்கவேண்டும்.

பின்னர் மேலே தெளிந்துள்ள நீரை மட்டும் பொறுமையாக மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தச்சாறுடன் தேன் கலந்து பருகவேண்டும். கீழே படிந்துள்ள வெள்ளை நிறத்தில் உள்ள கசடை நீக்கி விடவேண்டும்.

இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் ரத்த அழுத்தம் குறையும். மேலும் இதை பருகுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சி, பூண்டு இரண்டும் சுவாசக்கோளாறுகளை சரிசெய்யக்கூடிய தன்மை கொண்டவை. இது மாதவிடாய் பிரச்னைகளையும் தீர்க்கவல்லது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கிறது. செரிமான மண்டலத்தை காக்கிறது.

நோய்களை அண்டவிடாமல் காக்கிறது
இஞ்சியில் ஆவியாகக்கூடிய எண்ணெய்கள் உள்ளது. அதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கக்கூடிய ஒன்றாக இஞ்சியை மாற்றுகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றை அண்டவிடாமல் காக்கிறது.

பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. பூண்டில் வைரஸ்க்கு எதிரான குணங்களும் உள்ளது. இதுவும் சளி மற்றும் இருமலை போக்குகிறது. சளி, இருமல் நமக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்னையாகும். எனவே வாரம் ஒருமுறை இந்த பானத்தை நாம் பருகினால்போதும். இவை நம்மை அண்டாது காக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *