அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்திய கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிபிஐ ஒன்றிய செயலாளர் ஆதனூர் குமரேசன், தலைமை தாங்கினார்

ஏஐடியுசி கட்டட சங்க மாவட்ட தலைவர் அலெக்ஸ், முன்னிலையில் வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தோழர் காளிதாஸ், மற்றும் ஏஐடிசியு காசி விஸ்வநாதன் தாமஸ், ஆகியோர் கலந்துகொண்டு பேசியது கடந்த 10 ஆண்டுகால பாஜக மோடி அரசின் சிறப்பான திட்டங்கள் என்னவென்றால் மாநில கட்சிகளை பிளவுபடுத்தி அதில் குளிர்காய்வது தான் மாநிலத்தில் ஆளும் கட்சிகளிடமிருந்து வரியைப் பெற்றுக் கொண்டு மத்தியில் சர்வாதிகாரி போல் ஆளும் ஒன்றிய அரசு சரியான நீதி தருவதில்லை கேட்டால் ஆளுநரை வைத்து மிரட்டல் விடுவது தான் ஒன்றிய அரசின் சாதனை மேலும் வேலையின்மை பசி பட்டினி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொண்டிருப்பதாக பொய் சொல்லுவது பெட்ரோல் டீசல் விலையை அதிகப்படுத்தி விட்டு தற்போது இரண்டு ரூபாய் குறைப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது கேஸ் சிலிண்டர் விலை காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய் இருந்த விலையை இந்த பாசிச அரசு வந்தவுடன் ஆயிரத்திற்கு மேலே விலையை ஏற்றி விட்டது தொடர்ந்து ரவுடிகள் மற்றும் கட்ட பஞ்சாயத்து காரர்களை வைத்து கட்சி நடத்தும் இவர்கள் தான் மக்களுக்கு நல்லது செய்வார்களா கொலை கொள்ளை கற்பழிப்பு தான் வட மாநிலங்களிலும் அதிக அளவில் நடைபெறுகிறது மாநிலத்தின் தலைவர் அண்ணாமலை தினந்தோறும் உளறிக்கொண்டு வருகிறார்

தோல்வி பயத்தில் எதை கூறுவது என்று அவருக்கு தெரியவில்லை ஆனால் காங்கிரசும் திமுகவும் இணைந்தது பிடிக்காமல் இன்று இலங்கை தமிழர் பிரச்சனையை எழுப்பி அதில் குளிர் காய்ந்து விடலாம் என்று நினைக்கின்றனர் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் இந்தியா முழுவதும் ஆளுகின்ற மக்கள் பாசிச அரசுக்கு எதிர்ப்பாக வாக்களித்து இந்திய கூட்டணிக்கு அமோக வெற்றியை தருவார்கள் அத்துடன் இந்த மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளனர்.

இந்திய கூட்டணி சார்பில் நமது தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்ட அவர் ஆண்டனியா, பாஷாவா, என்று மக்கள் தெரிந்து வாக்களிக்க வேண்டும் நல்லவர் பாஷாவுக்கு வாக்களியுங்கள் அவர் தான் தங்க தமிழ்ச்செல்வன் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் வட்டார தலைவர் சுப்பாராயலு, மற்றும் ராமமூர்த்தி, விசிக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் மெடிக்கல் கமல்ரமேஷ், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏஐடியுசி கட்டிட தொழிற்சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சிபிஐ மாவட்ட பொருளாளர் முக்கம்மாள், கலந்துகொண்டு நன்றியை கூறினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *