திண்டுக்கல் நகர் பகுதியில் 3 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பறிமுதல் மற்றும் ரசாயனம் கலந்த குளிர்பானம் 75 லிட்டர் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள்
மெயின்ரோடு, கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும் முகமதியாபுரம் பகுதியில் குளிர்பான கடையில் கெமிக்கல் கலந்த ஜிகர்தண்டா விற்பனை செய்ததை தொடர்ந்து 2 கடைகளில் இருந்து 75 லிட்டர் கெமிக்கல் ஜிகர்தண்டாவை பறிமுதல் செய்து இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *