இந்திய-ஜப்பான் தமிழ் கலாச்சார மேம்பாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக துணைத் தலைவர் பங்கஜ் , தூதரக அதிகாரி மாயங் ஜோஷி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் யெஷ்வந்த் தேவ் பன்வார் ஆகியோருடன் தமிழ் சேவா சங்க நிறுவனர் சு.பா. ஞானசரவண வேல் நேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் கலாச்சார பண்பாட்டுக் கலைகள் மற்றும் வாழ்வியலை ஜப்பான் நாட்டில் ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் தமிழ் சேவா சங்கம் மூலம் ஜப்பானில் தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி சார்ந்த தொழில் வாய்ப்புகள் போன்றவை பற்றி விரிவாக ஆலோசனை
வழங்கப்பட்டது.

முன்னதாக ஜப்பானில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்த தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் வளர்ப்பது,அடுத்த தலைமுறை தமிழ் மொழி பெருமை குறித்து அறிய செய்வது என டோக்கியோ வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாய் வருடம் தோறும் தமிழ் வருடப்பிறப்பு,பொங்கல் விழா போன்ற நிகழ்ச்சிகளை டோக்கியோ தமிழ் சங்கம் நடத்தி வருகிறது.தமிழ் பாரம்பரியத்தை நம் தமிழர் இடைவிடாது கடைபிடிக்க உறுதுனையாக இருக்கிறது.தமிழ் சமூகத்தினரிடையே நல்லிணக்கம் பேண வைத்து , நம் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் டோக்கியோ வாழ் தமிழர்களிடம் மட்டுமல்லாது உலக தமிழர் அனைவருக்கும் பறை சாற்றி, இடர் காலத்தில் உதவி கரம் செய்து உயர் சமூகமாய் டோக்கியோ தமிழ் சங்கம் துணை நிற்க வேண்டும் என தமிழ் சேவா சங்கம் நிறுவனர் சு.பா. ஞானசரவண வேல் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *