கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவி மூடப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி இந்த அருவி தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது.
தொடர்ந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் குறிப்பாக தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி அலைகின்றனர்
ஆனால் மணிமுத்தாறு அருவி மூடப்பட்டிருப்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் நெல்லையை பொறுத்தவரை அருகில் உள்ள பிற நீர்நிலைகள் அணைகள் மற்றும் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லை சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுக்கின்றனர் எனவே மணிமுத்தாறு அருவியில் குளிக்க உடனே அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வனத்துறையில் இடம் விசாரித்த பொழுது அருவிகள் கடந்த டிசம்பர் வெள்ளப்பெருக்கின் சேதம் அடைந்துள்ளதால் அதை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர் மேலும் விரைவில் பராமரிப்பு பணி முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்தனர்