அலங்காநல்லூர்
மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், மற்றும் தண்ணீர்பழம், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளைபிஞ்சு, சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளருடன் தெரிவித்தது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் அதேபோல் தேர்தல் முடிந்தவுடன் ஒரு லட்சம் வாக்குகளை நீக்கி விட்டதாக கூறும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அடிப்படை கட்டமைப்பு சரி இல்லை என்பதை காட்டுகிறது தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டங்களாக வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியை மேற்கொண்டது
அண்ணாமலை கூறுவது எந்த கட்சியினராலும் ஏற்றுக்கொள்ள முடியாது தோல்வியின் பயத்தில் அவர் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்
மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், குமாரம்பாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.