கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவினை மதிக்காமல் நகராட்சி பகுதியில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தொடரும் ஆக்கிரமிப்பு

நகராட்சி கழிப்பிட முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உருவாக்கப்பட்ட கடை

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நகராட்சி ஆணையர் அறையில் உள்ளியிருப்பு போராட்டம்

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அடுத்த மாதம் 9ந்தேதி எடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அறிவித்த போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கழிப்பிடம் முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, திடீரென கடை அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு புறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில்பட்டி கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை ஊக்குவித்து வருகிறது..

கோட்டாட்சியர் உத்தரவினை மதிக்காமல் செயல்பாடு நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *