வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். உடன் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.