பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் வி.களத்தூரில் அஇஅதிமுக காவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலோடு வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் இணைச் செயலாளர் கலாவதி கண்ணபிரான் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற கோடைகால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் அவர்கள் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களின் பொற்கரங்களால் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், சுவையான மோர், நீர் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவைச் செழியன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி, பெரம்பலூர் நகரச் செயலாளர் ராஜ பூபதி, காவியா ரவி, தேவையூர் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் SDPI கட்சியின் நிர்வாகிகள், அஇஅதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *