பூங்காவில் பறவைகளுக்கு குடிநீர் வைக்கும் திட்டத்தை மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்
தற்போது தமிழகத்தில் அதிக அளவில் வெயில் ஏற்படுவதால் பறவைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து கோடை காலத்தில் பறவைகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை உள்ளது
என்பதை அறிந்த மாநகராட்சி நிர்வாகம் முதல் கட்டமாக 100 இடங்களில் 300 தொட்டிகளில் தண்ணீர் பறவைகளுக்கு வைக்க முடிவெடுக்கப்பட்டது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி பூங்காவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்