கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சி.இராமச்சந்திரன் அவர்களின் துரிதமான பணியினை பாராட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் பாராட்டு சான்று மற்றும் பரிசு வழங்கி நெஞ்சார பாராட்டினார்.
இராமச்சந்திரன் அவர்கள் சமூக வலைதளங்களில் சமுதாயத்துக்கு எதிரான செய்திகளை பதிவு செய்யப்படுவதை கண்காணித்து உடனுக்குடன் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு குறித்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தமைக்கு அவர்களின் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கண்காணிப்பாளர் தெரிவித்துகொள்வதாக பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்து வருகிறார் நான் அவரை நெஞ்சார வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துயுள்ளார்.