திருச்செங்கோடு நகராட்சி ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் செங்கோடம் பாளையத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீவைப்பு. விடிய விடிய கொளுந்து விட்டு எரிந்த தீ. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாமல் தவிப்பு

திருச்செங்கோடு நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கோடம் பாளையம் மின்மயானத்திற்கு பின்பக்கம் அமைந்துள்ள நகராட்சி குப்பைகளை வகை பிரிக்கும் இடத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் விடிய விடிய கொழுந்து விட்டு எரிந்து வரும் குப்பை கிடங்கு. புகைமூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி. உடனடி நடவடிக்கை எடுக்கவும் குப்பைகளை அந்த பகுதியில் கொட்ட கூடாது என வலியுறுத்தி திடீர் சாலை மறியல். உடனடியாக பே லீசார் தலையிட்டு சமரசம் பேசியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.

விடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம். மாவட்ட ஆட்சியர் உமா நகராட்சி நிர்வாகமண்டல இயக்குனர் சேலம் பூங்கொடி அருமைக்கண் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை. மர்ம நபர்களை கண்டுபிடிக்க வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் அந்த பகுதியில் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் உமா அதிகாரிகளுக்கு உத்தரவு.

இது குறித்து மாலை 5 மணிக்கு அனைத்து தரப்பு அதிகாரிகளும் நாமக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *