தேனி மாவட்டம்
கோடைகாலங்களில் பன்றிகளுக்கு ஏற்படும் காய்ச்சலை  தடுப்பதற்காக நடைபெறும்  தடுப்பூசி முகாம்களை பன்றி வளர்ப்போர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – 
                       மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ ஜீவனா தகவல் பன்றிகாய்ச்சல் நோய் ஒருவிதமான வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு இந்நோய்பரவும் அபாயம் இல்லை. தேனி மாவட்டத்திலுள்ள பன்றிகளை இந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டம் மூலம் பன்றிகளுக்கு பன்றிகாய்ச்சல் நோய்தடுப்பூசி பணி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்நோய் குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள பன்றி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் நாட்டின மற்றும் வெளிநாட்டின பன்றிகளை பாதிக்கக்கூடியது ஆகும்.

பன்றிக்காய்ச்சல் நோய்
	பன்றிக் காய்ச்சல் நோய்  கிளாசிக்கல் சு வைன் ஃபீவர்  ஒரு கொடிய வைரஸ் தொற்றாகும். இந்நோயினால் அதிக காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் தீனி உட்கொள்ளாத நிலை ஆகியவை ஏற்படும். சில சமயங்களில் பன்றிகள் திடீரென இறக்க நேரிடும். இந்நோயானது நோயுற்ற பன்றிகளின் உமிழ்நீர்,  மூக்கிலிருந்து வடியும் நீர், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் நேரடியாக நோயில்லாத பன்றிகளுக்கு பரவும். நோய் தாக்கிய பன்றிகளின்  உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதோடு இறப்பு சதவீதம் மிகவும் அதிகம் இருக்கும். சிகிச்சை முறைகள் எதுவும் பலனளிக்காது. தடுப்பூசி செலுத்துவது ஒன்றே தீர்வாகும். 

தடுப்பூசிப்பணி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெண்பன்றி வகைகள் பெரிய அளவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பிற பகுதிகளில் குறைந்த அளவிலான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இத்தடுப்பூசியை செலுத்துவதினால் பன்றிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. மேலும் கோடைகாலத்தில் பன்றிகளை பராமரிக்கும் முறை குறித்து பண்ணையாளர்கள் அறிந்து கொண்டு செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

	இத்தடுப்பூசிப்பணி மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு மே  23.05.2024 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது. ஆகவே கால்நடை பராமரிப்புத்துறையினர் தடுப்பூசிப் பணியினை மேற்கொள்வதற்கு தங்களுடைய கிராமத்திற்கு ஹம் வருகைதரும் போது பன்றிகளை வளா்ப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா கூறியுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *