தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் பவித்ரன் வயது 14 இவர் மாலை 7 மணி அளவில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார்
கிணற்றில் நான்கு அடி தண்ணீர் இருந்ததால் சிறு காயத்துடன் கிணற்றில் இருந்தவாறு காப்பாற்ற வருமாறு சத்தம் எழுப்பினார்.
இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் தந்தை சிவகுமாருக்கு தகவல் கொடுத்துவிட்டு பொதுமக்களே மீட்டு விடலாம் என்று முயற்சித்து கிணற்றில் இறங்கினர்.
ஆனால் மாணவனை மீட்க வழி தெரியாமல் இருந்தனர் உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் போராடிக் கொண்டிருந்த மாணவனை லாவகமாக கயிற்றில் மூலம் மேலே கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பு