மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன், தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் வளாகப் பகுதியில் வேள்வி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கு பால், பன்னீர், தேன், விபூதி, குங்குமம், சந்தானம், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீவாதாரணையும் காண்பிக்கப்பட்டது
இவ்விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது .இதில் ஐயப்ப முருக பக்தர்களும் கலந்து கொண்டனர்.