செய்தியாளர் மு. பட்டாபி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே1-ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்க சார்பில் மே தின விழா கொண்டாட்டம் சங்கத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது
சங்க கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு சங்க செயலாளர் சரவணன் பொருளாளர் முருகன் துணைச் செயலாளர் பெரியசாமி துணைத் தலைவர் முருகன் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொழிலாளர்கள் என100 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது