விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது கடம்பன்குளம். இங்கு ஆவியூரை சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர்களுக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை குவாரிக்கு தேவையான வெடிமருந்துகளை வாகனத்திலிருந்து இறக்கும் பணி நடைபெற்றதாகவும் இதில் உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த கோவில்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் குருசாமி (60) துரை (25) மற்றும் புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (47) ஆகிய 3 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். இவர்களின் உடல் பாகங்கள் 2 கி.மீ சுற்றலாவிற்கு சிதறிக்கிடந்தது.
சம்பவத்தை அறிந்த காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்,எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தை கண்டித்து சுற்றியுள்ள கிராம மக்கள் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த குவாரியை நிரத்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.