வாடிப்பட்டி, மே.19
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளியில் 26 வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பெல்ட்கள் தேர்வு போட்டி நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு கண்ண தாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையாதலைமை தாங்கினார். வர்த்தக சங்க செயலாளர் மனோராஜா, இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பள்ளி நிர்வாகி சென்சாய் கணேசன் வரவேற்றார் இதில் கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பட்டைகள் தேர்வு நடந்தது.
இந்த போட்டியின் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வகணேஷ், சந்துரு, ஷாலினி, தன்யா, டானியல் ராஜ், மேரனிஷ், சந்தோசினிஸ்ரீ. செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.