கம்பம் அருகே கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நம் இந்திய திருநாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தையொட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா.இளங்கோவன் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நம் இந்திய திருநாட்டின் தேச பிதா மகாத்மா காந்தி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து விழாவில் பங்கேற்ற பேரூராட்சி மஸ்தூர் பணியாளர்கள் குடிநீர் திட்ட பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் துணைத் தலைவர் பசுபதி குமார் பேரூராட்சி தலைமை எழுத்தர் தெய்வநாயகி துப்புரவு ஆய்வாளர் பாண்டீஸ்வரி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *