நாமக்கல்
உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், இல்லம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் காந்திபுரம் கிழக்கு வீதியில் கொல்லிமலை காரரவள்ளி செல்லும் சாலையில் உள்ளது
இங்கு நேற்று மாலை சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், உடல் அவரது சொந்த இல்லத்தில் உறவினர் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது அப்போது தமிழ்நாடு
பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு , வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் , தமிழ்நாடு அரசு
பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் மலர்விழி,
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மு மணிமேகலை
ஆகியோர் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்