தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,19,33,342 குடும்பங்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,23,894 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு,பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி போல்பேட்டை -1 நியாயவிலைக் கடையில் ரூ.1000 ரொக்கப்பணம், பச்சரிசி, சீனி, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி சார்ஆட்சியர் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, துணைப்பதிவாளாகள் ரவீந்திரன், மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், கூட்டுறவு சார்பதிவாளர் சூரியா, தனிவட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை, விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *