ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் இரண்டாவது தெரு பகுதியில் தனிநபர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த ஆறு மாதமாக சாலையில் கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வேண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக காமராஜர் இரண்டாவது வார்டு பகுதி பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.