பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிக்குளம் – புது அம்மாப்பாளையம் சாலையானது கடந்த வருடம் மழையின்போது சேதமடைந்தது. இதனை சீரமைத்துதரக் கோரி பல்வேறு புகார் மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஆனால் முறையாக சரிசெய்யப்படாமல் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் மட்டும் பேட்ஜ் வொர்க் என்று சொல்லக்கூடிய மேற்புறம் மட்டும் ஜல்லி கற்களை நிரப்பி, தார் ஊற்றி சரிசெய்யப்பட்டு வருகின்றது. முழுமையாக சீரமைக்கப்படாமல் இது போன்ற அரை குறை வேலை செய்வதால் எந்த பயனும் இல்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்